நா.முத்து நிலவன்
காலை வணக்கத்தில்
‘நேர் நில் ‘ சொல்லியும்
நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி தரை பார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடி வகுப்புக்கு
மவுனமாய்ச் செல்லும்.
ஐந்து வகுப்பிலும்
அறுபத்தேழு பேர்சொல்லி
வருகை பதிவதற்குள்
மணியடித்துவிடும்,
அடுத்த வகுப்பு துவங்கும்.
பெரியாரைப் பற்றிய
உரை நடைக்குமுன்
கடவுள் வாழ்த்தோடு
செய்யுள் தொடங்கும்
உலகப் படத்தில்-
பாற்கடலைத் தேடும்
இலக்கியம்.
ண்டவனைக் காப்பாற்றும்
அறிவியல்.
ள்பவரைக் காப்பாற்றும்
வரலாறு.
வறுமைக் கோடுகளை மறைத்து
வடஅட்சக் கோடுகளைக் காட்டும்
புவியியல்.
கடன்வாங்கச் சொல்லித்தரும்
கணக்கு.
கிழிந்த சட்டை,
நெளிந்த தட்டோடு
அச்செழுத்துக்களை மேய்ந்த
அஜீரணத்தில் மாணவர்.
‘எலேய்! எந்திரிச்சு வாடா ‘
அவ்வப்போது வந்து
அழைக்கும் பெற்றோர்.
உபகரணங்கள் இல்லாமல்
பாவனையில் நடக்கும்
செய்ம்முறைப் பயிற்சி.
அவசரத்தில்
தின்றதை வாந்தியெடுக்கும்
தேர்வுகள்.
பழைய மாணவர் எம்.எல்.ஏ கி
பள்ளிக்கு வந்தார்.
சிரியர் கையை
தரவாய்ப் பற்றி,
‘கோரிக்கை ஏதுமுண்டா
கூறுங்கள் ‘ என்றார்-
‘நிரந்தரப் படுத்தணும்
நீயும் சொல்லணும் ‘
திறந்த உலகம்தான்
சிறந்த படிப்பாம்,
எங்கள் பள்ளிக்குக்
கதவே கிடையாது-
கட்டடம் இருந்தால்தானே ?
‘எங்கள் பள்ளி நல்ல பள்ளி
கட்டடம் இரண்டு பூங்கா ஒன்று ‘
-நடத்துவார் சிரியர்.
‘எங்கேசார் இருக்குது ? ‘
மரத்தடி மாணவன்
எழுந்து கேட்பான்.
‘புத்தகத்தைப் பார்ரா ‘
போடுவார் சிரியர்.
போதிமரத்தடியில்
புத்தருக்கு ஞானம்,
புளியமரத்தடியில்
மாணவர்க்குப் பாடம்.
இதுவே-
எங்கள் கிராமத்து
ஞானபீடம்!
—-muthunilavan@yahoo.com
- பெரியபுராணம் — 5
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- ஒரு துளியின் சுவை
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- வேண்டும் – வேண்டாம்
- எனக்குள் காலம்
- தோழி
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- உயிர்க்குடை
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்
- மனித உரிமை ஆணையம்..!!!
- மசாஜ்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- குரங்கிலிருந்து …
- பாதை மாறினால்….
- எங்கே தவறு ?
- ரயில் பயணங்களில்
- மழை மழையாய்…
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- மரண தண்டனை எதற்காக ?
- புன்னகையை மறந்தவன்
- அது
- தனிமை வாசம்
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- அன்பு
- நிகழ்வின் ரகசியம்
- காற்று
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- கிள்ளுப் பூ