சூத்திரம்

பவளமணி பிரகாசம்


வேண்டும் என்ற வேட்கை இருந்தால்
பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை
பத்திரமாய் வெளிக்கொணரலாம்
பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு
ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே
மத்தெடுத்து கடைகையில் திரளுமே
மெத்தென்ற நல்ல வெண்ணெய்யுமே
பாத்திரத்தில் அதையெடுத்து
பக்குவமாய் அடுப்பில் உருக்கிடவே
பொன்னிறத்தில் கமகமவென நெய்-
இல்லறத்தின் நெய் மணக்க
இணக்கமும் இன்பமும் கைகூட
கொஞ்சம் கவனமாய் மெனக்கெட
பழகிவிட்டால் கவலையில்லை.

—-
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

You may also like...