பாலன் பிறந்தார்

புஷ்பா கிறிஸ்ரி


மார்கழி மாதத்து

மாபனிக் குளிரில்

மாமரி அன்னை

மரியின் மடியில்

பார்புகழ் மன்னன்

பாலகன் யேசு

தாய் மடியில்

தானாய்த் தவழ்ந்தான்

பாடிடும் ஆயரும்

பாராளும் வேந்தரும்

நாயகன் யேசுவை

நயமாய் வாழ்த்தினர்

விண்ணக வேந்தன்

மண்ணில் தவழ்ந்திட்ட

நந்நாள் மார்கழி

நாமும் வாழ்த்துவோம்

அன்பு உள்ளங்கள்

அனைவரும் மகிழ்ந்து

ஆனந்தம் கொண்டாடி

ஆடிப் பாடி

கொண்டாடி மகிழ்ந்திடும்

நத்தார் பண்டிகை

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி