மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

அய்யனார்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

03.01.2010 அன்று மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.

முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியும் இலக்கிய ஆர்வலருமான அ.செல்வராஜ் தலைமையுரையாற்றினார் .

எழுத்தாளர் முத்துமீனாள் வரவேற்பு உரையாற்றினார் .

அய்யனாருக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பை திரைப்பட நடிகர் நாசர் வெளியிட ஓவியர் .ட்ராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 150/- )

முதுமீனாளின் முள் நூலை நாசர் வெளியிட செட்டிநாடு பல்கலை கழகத்தின் பதிவாளர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார். (விலை ரூ 75 )

நேர்காணல் இதழின் நடிகர் நாசர் பற்றிய இதழை ஓவியர் .ட்ராட்ஸ்கி மருது வெளியட நாசரின் மனைவி கமீலா நாசர் பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 25. )

வண்ணதாசன், பொ.வேல்சாமி , கோவை ஞானி , கவிஞர். அபி , இமையம் , பேராசிரியர் .நீலகண்டன் ஆகியோரின் நேர்காணல்களின் தொகுப்பு அலையும் நினைவுகள் -நேர்காணல்கள் -பவுத்த அய்யனார்
நூலை நாசர் வெளியிட மருத்துவர். சதீஷ் கண்ணா பெற்றுக்கொண்டார். (விலை ரூ. 100 )

வண்ணநிலவன் கவிதைகள் தொகுப்பை நாசர் வெளியிட வண்ணநிலவன் மனைவி சந்திரா பெற்றுக்கொண்டார். ( விலை ரூ. 40 )

நூல்கள் பற்றிய உரைகளை அ.மார்க்ஸ் , எம்.ஜி.சுரேஷ் , பொன். தனசேகரன் ஆகியோர் பேசினார்கள்.

நடிகர் நாசர் பற்றி சண்முகராஜா , ரோகிணி, கருனாப்ராசாத் பேசினார்கள் .

விழாவிற்கு நவீன நாடகத்துறை சார்ந்தவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.

பவுத்த அய்யனார் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

மிக்க அன்புடன்,

அய்யனார்





Series Navigation23 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் >>

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

அய்யனார்

அய்யனார்