உலகம் உன்னை….

புஷ்பா கிறிஸ்ரி


பாடாய்ப் படுத்தும்
உலகம் உன்னை..
மயிலிறகு கொண்டுன்னை
வருடி விடாது
குயில் மொழி சொல்லிக்
கொஞ்சி மகிழாது
தூக்கியெறிந்து விடும்
துர்நாற்றமுள்ள உலகிது
ஆனாலும் உலகம் உன்னை
தூற்றும் போதும்
நீ துவழாதே!
உன்னைச் சீண்டிடும் உலகை
நீ சீராட்டு.. பாராட்டு…
மயிலிறகு கொண்டு
நீ அதனை வருடி விடு
ஒரு கன்னத்திலறைந்தவனுக்கு
மறு கன்னத்தைக் காட்டச்
சொன்ன கிறிஸ்து..
நீயும் ஒரு கிறிஸ்து தான்
மாற வேண்டாம்.
ஆனால்..
கிறிஸ்து போல்
கீழிறங்கி வா!
உலகம் உன்னைத்
தொடரலாம்..
இல்லை உலகம்
உன்னை மறுதலித்தாலும்..
உன் வாழ்வு என்றும்
புனிதம் பெறும்..
***

pushpa_christy@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி