புஷ்பா கிறிஸ்ரி
பாடாய்ப் படுத்தும்
உலகம் உன்னை..
மயிலிறகு கொண்டுன்னை
வருடி விடாது
குயில் மொழி சொல்லிக்
கொஞ்சி மகிழாது
தூக்கியெறிந்து விடும்
துர்நாற்றமுள்ள உலகிது
ஆனாலும் உலகம் உன்னை
தூற்றும் போதும்
நீ துவழாதே!
உன்னைச் சீண்டிடும் உலகை
நீ சீராட்டு.. பாராட்டு…
மயிலிறகு கொண்டு
நீ அதனை வருடி விடு
ஒரு கன்னத்திலறைந்தவனுக்கு
மறு கன்னத்தைக் காட்டச்
சொன்ன கிறிஸ்து..
நீயும் ஒரு கிறிஸ்து தான்
மாற வேண்டாம்.
ஆனால்..
கிறிஸ்து போல்
கீழிறங்கி வா!
உலகம் உன்னைத்
தொடரலாம்..
இல்லை உலகம்
உன்னை மறுதலித்தாலும்..
உன் வாழ்வு என்றும்
புனிதம் பெறும்..
***
pushpa_christy@yahoo.com
- வேதாளம் கேட்ட கதை
- இன்று நாமும் குழந்தையும்
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- Europe Movies Festival
- வேண்டுதல்
- பனி
- உலகம் உன்னை….
- காலமும் பயணியும்
- நிலவு
- நான் நானாக …ஒரு வரம்
- அநாதை
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- Europe Movies Festival
- கள்ளர் சரித்திரம்
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- இவள் அவளில்லை ?.
- முக்கால் வயது முழுநிலவு
- அப்பா!
- தாமதம்
- சர்க்கரை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6