ஒன்பதில் குரு

நம்பிராஜன்


திண்டிவனம் பக்கம்
திருவக்கரை
வக்கரை போனால்
அக்கரை போகலாம்
கல்மரங்கள் முளைத்த
காடு அங்கேதான்
மும்முகம் கொண்ட
மூலஸ்தான லிங்கம்
வக்ர தாண்டவத்தில்
நடராஜர்
விரும்பியது கைகூடும்
வக்ரகாளியிடம் வேண்டிக்கொண்டால்

ஒரு ஒளவை
ஒரு ஆண்டாள்
ஒரு காரைக்காலம்மையார்
யார் படிக்கிறார்கள்
இப்பொழுதெல்லாம்
ஒக்கூர் மாசாத்தியார்
காக்கைப் பாடினியார்
படித்திருப்பார்களா
இந்தத் தலைமுறையினர்

ஒன்பதில்
குரு.
***

Series Navigation

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

நம்பிராஜன்.

நம்பிராஜன்.