தமிழ் இலக்கியத் தோட்டம்
தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
2011 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.
பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 12 மார்ச்சு 2011
பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு – https://sites.google.com/site/tcaward/home/tamil
- புளித்துப் போகிறது நாற்றம்
- சில்லறை கவிஞர்கள்
- நம்பிக்கையோடு
- என்னுள் ஒருவன்
- ஒரு கவிதை உருவாகிறாள்
- என்னவாயிற்று மல்லிகாவிற்கு
- குட்டிக்கதைகள்
- வானங்கள்
- மேகலை இலக்கிய கூடல்
- எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு
- அசைவத் தீ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)
- உலகம் சுற்றும் குழந்தைகள்
- “பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….!“
- இழந்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)
- 5 கவிதைகள்
- சுயநலம் !
- தெரு பார்த்தல்
- நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.
- கடற்கரை காதல்
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு
- இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி
- வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை
- விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:
- நினைவுகளின் சுவட்டில் – (61)
- மேளா
- சிறகு முளைச்சுட்டா
- யாதெனின்…யாதெனின்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15
- சமையல் யாகத்தின் பலியாடு
- குழந்தைமை..
- மூடிக்கோ
- கடல் வற்றிய வேளை
- ஒற்றைத் தகவலின் தூது..
- சங்கமம் நானூறு
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)
- காலமும் கடிகாரங்களும்
- ஹைக்கூ கொத்து
- தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..
- நாதப்பிரம்மம்
- கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்
- சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- எல்லாம் மாயா