துரோகம்…!

தீபா திருமூர்த்தி


ஒவ்வொரு
பேருந்து புகைக்கும்பின்னால்
ஆண்மை கலந்த
உன் வாசம்
வருகிறதா என
எதிர்பார்த்துக்
கழிந்த காலங்களை எல்லாம்
கட்டி இழுத்து வந்து
முட்டி மோதி
ஒட்டிப் பார்க்கிறேன்..,
நீ
வந்த பிறகும்
வழக்கமான
உன் வாசம்
வாடகைக்கு விடப்பட்டதாய்…,
மொத்தமாய்
விற்றுத் தீர்க்கப்பட்டதாய்….
உணர்கிறேன்!
வழி நெடுகிலும்
சவப் பூக்களின்
தூவல்!
கன்பூக்களில்
நேச இதழ்களின் காவல்!
எனக்குத் தெரியும்
மண் மூட்டை சுமக்கும்
நீ
மரகதங்களின்
மகத்துவம் அறியவாப் போகிறாய்?
மனத்துக்குள்
மூத்த ஈரம்…!
மெத்தைக்குப்
புதிய மல்லிகை!

தீபா திருமூர்த்தி

Series Navigation16 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16 >>

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

துரோகம்

கவிதா நோர்வே



பெருமழை
ஓய்ந்து போனதொரு
இரவில்..
இலை சொட்டும் நீர் போல்
இதயத்தின் ஓரங்களில்
உதிரத் துளிகள்

எரிக்கப்பட்ட
எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து
சாத்தான்களால் எறியப்பட்ட
எமது ஆதாம் ஏவாள்களுடன்
கர்த்தருமா துரத்தப்பட்டார்?

புயல் ஓய்ந்து
நிசப்தம் குடிகொண்ட
இக்கணத்தை அமைதி என்று
எப்படி மொழிபெயர்ப்பது?

ஊரிலிருந்து
கடத்தப்பட்ட காற்றிலும்
ரத்த வாடை கசிகிறது

துப்பாக்கிமுனைகளில்
புறப்பட்ட புகையில்
எங்கள் எச்சங்களும்
மறைக்கப்பட்டன

பெருங்கடல் சூழ்ந்தென்ன
காய்ந்து போன மணற்பரப்பும்
வற்றிப்போன குளங்களும்
உடைந்து போன நதிகளும்
இயற்கையும் துகள்களாகி
வனாந்தரமாய்
மேகம் தொலைத்த
வானத்தை நோக்கி
எங்கள் பூமியின் தவம்
தொடர்கிறது

எம் யாக வேள்வியின்
தீ அணைக்க மட்டுமாய்
வந்து பொழிந்து போகிறது
கடந்து போகும்
தூரத்து மேகங்கள்.


kavithai1@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

கவிதா நோர்வே

கவிதா நோர்வே

You may also like...