எஸ்ஸார்சி
மனத்தால் பிணைபடு தேருடை
அசுவினிகளே அழகர்களே
உஷையைப் பின் பற்றுங்கள்
எங்களுக்கு ஆவினம்
மறப்புதல்வர்
புரவி யொடு வளமை தாரும்
வேள்விச்செல்வர் நீவிர் ஆங்கே
அவிகொடுப்போர் யாம்
பாதுகாப்புடை மனை தருக
அறிஞர்களைக் காப்பவர் நீவிர்
வழிபடு ஏனையர் வசம்
தங்கி எமக்கு த்தாமதம் செய்யாதீர்
உமது தேர் பீடம் பொன்
உமது தேரச்சு பொன்
தேர் சக்கரம் பொன்
கடிவாளம் கூடப் பொன்னே
தேர் ஒளியைப் பொழிகிறது
தாசர்கள் வாழிடம் தகர்க்கும் நீவிர்
உணவொடு புகழ் செல்வம்
கொண்டு தாரும் எமக்கு ( ரிக் 8/5 )
அசுவினிகளே செல்வர்களே
உமது தேரில்
சூரியை அமர்ந்தவுடன்
உமது விருப்பங்கள் நிறைவுற்றன
வெட்கம் பந்தப்படுத்தா
செல்வம் தருக எமக்கு
உரிய காலத்தே
மக்கட்பேறருள்க
நிந்தைக்கு எம்மை ஆட்படா
வாழ்வு தாரும்
அசுவினிகளே உமது
தேரின் முச்சக்கரங்கள்
பார்வைக்கு அகப்படாதவை
இப்போது புலனாகின்றன
யாம் தொலைத்தவை
எமக்கு மீட்பர் நீவிர்
சத்தியம் காப்போம் யாம்
எம்முன் வாரும் நீரே (ரிக் 8/8 )
அக்கினி அனலொடு
எமக்கு சுகம் தருக
சூரியன் ஒளிச்சுகம் தருக
மாசிலாக் காற்று வீசி இனிமை தருக
எங்களுக்கு க்கேட்டைத்தேடும்
கொடிய மானிடன்
தனக்கே அது அதுவாகி
இடறுருவான்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோன்
எமக்கு இடர் தருவோன்
பழித்துப்பேசி பகைவளர்ப்போன்
பாவம் கூட்டிகள்
மானிடர் இதயம் அறிந்த நீவிர்
கயவன் யார் என்பதையுமறிவீர்கள் ( ரிக்8/18 )
————————————————
essarci@yahoo.com
- அறிவியலும் அரையவியலும் -2
- உன்னைப்போல் ஒருவன்
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- நினைவுகளின் தடத்தில் – (35)
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- அன்புள்ள ஆசிரியருக்கு
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- என் வரையில்…
- தொடரும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 <>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) <> கவிதை -16 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 54
- உள்வெளிப்பயணங்கள்
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உயிரின் துடிப்பு
- இது(ரு) வேறு வாழ்க்கை
- தினேசுவரி கவிதைகள்
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- தொடர்பில்லாதவை
- சுழற்றி போட்ட சோழிகள்
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சாயங்கால அறை
- சேரா துணை..
- பாத்திரத் தேர்வு
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- படம்