வேத வனம் – விருட்சம் 45

எஸ்ஸார்சி


பழிச்சொல்லிலிருந்து காப்போன்
சோமனே
எமது மந்திரக்காவலும் சோமனே
பிரம்மத்தை ப்பழிப்போனை
அழிப்போனும் அச்சோமனே

நல்மனம் நல்குக
உதயசூரியனைக்காணும்
பேறு பெறுக யாமே
அக்கினி நீயே
அழைத்த உடன் வருவோன்
தேவர்கட்குத்தூதன்

அக்கினியில் ஒருவன்
பர்ஜன்யன்
அவன் உணவு தருவோன்
அடுத்தவன் அக்கினி
சந்ததி கொடுப்போன்
வேண்டுவன யாம்
இவை இரண்டுமே ( ரிக் 6/52)

யாம் சூன்ய மனைகளில்
வாழாமலிருப்போம்
அந்நியர் மனைக்கேகி
வதியாமலிருப்போம்
நாங்கள் புதல்வர்களற்றும்
வீரர்களற்றும்
இருத்தலென்பது இல்லை
அனைத்தும் அறிந்த அக்கினி
மனைகளின் நண்பன்
மக்கள்செல்வம்
எம் மனைமிசை அருள்வோன் ( ரிக் 7/1 )

அக்கினி விவேகி
கவிஞன் அவன்
ஒளிதரும் விருந்தினன்
ஒயா முனைப்புடையோன்
சுகம் தருவோன்
வசீகரன் விடியலின் சோதி
நீரின் ஆதி
செடிகொடிகளுள் கருவாய் வாழ்கிறான் ( ரிக் 7/9 )

அக்கினி எம்மைப்
பாவங்களினின்று காப்போன் நீ
தகிக்கும் சுவாலையால்
எதிரியைச்சுடுவோன்
எம் மக்களுக்கேயாகியமகத்துவன்
மாபெரும்
இருப்புக்கோட்டைக்கு காவல்
பாவம் செய்யாது
பகைவரிடம் மாட்டாது
இரவும் பகலும்
எமது காக்கும் கடவுள் ( ரிக் 7/15 )
———————————————–

essarci@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி