ராமச்சந்திர கோபால்
சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில்
நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக
रामः – ராமர்
शेखरः – சேகர்
ஆகிய ஆண்பெயர்கள் முடிவது போலவே
एषः – எஷஹ, இவர்
सः – ஸஹ, அவர்
ஆகியவையும் அமைகின்றன
அதே போல
सीता, उमा, போன்ற பெண்பால் பெயர்கள் முடிவது போலவே
एषा – எஷா, இவர்
सा – ஸா, அவர்
ஆகியவையும் அமைகின்றன. இந்த ஒழுங்கை நினைவில் கொண்டுவிட்டால் சரியாக
நினைவிலிருந்து பேசிவிடலாம்.
तत् आभरणम् என்று பார்த்தோம்
சரி இப்போது முந்தைய பாடத்தின் இறுதியில் இருந்த வீட்டுப்பாடங்களை செய்து
முடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அவற்றின் விடைகளை தருகிறேன். சரி பார்த்துகொள்ளுங்கள்.
இவர் ராம – एषः रामः
இவர் சீதா – एषा सीता
இது கமலம் – एतत् कमलम्
அது யானை सः गजः
அது மாலை सा माला
அது வாகனம் तत् वाहनम्
இது என்னுடைய யானை एषः मम गजः
இவர் என்னுடைய மனைவி एषा मम भार्या
இது என்னுடைய ஆபரணம் एतत् मम आभरणम्
அது உங்களுடைய யானை सः भवतः गजः
அவர் உங்களுடைய மனைவி सा भवतः भार्या
அது உங்களுடைய ஆபரணம் तत् भवत्याः आभरणम्
–
अस्ति – அஸ்தி என்றால் இருக்கிறது/இருக்கிறார் என்று பொருள்
नास्ति – நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்
अत्र – அத்ர இங்கே
तत्र – தத்ர – அங்கே (தத் என்றால் அது ஆகவே தத்ர என்றால் அங்கே)
कुत्र – குத்ர என்றால் எங்கே?
सर्वत्र – சர்வத்ர என்றால் எல்லாவிடத்திலும்
एकत्र – ஏகத்ர ஓரிடத்தில்
अन्यत्र – அன்யத்ர – வேறிடத்தில்
–
இப்போது சில வாக்கியங்களை அமைப்போம்
ராமர் எங்கே இருக்கிறார்?
சீதா எங்கே இருக்கிறார்?
சீதா அங்கே இல்லை.
சீதா இங்கே இருக்கிறார்.
ராமர் இங்கே இல்லை
ராமர் அங்கே இருக்கிறார்
யானை எங்கே இருக்கிறது?
யானை அங்கே இருக்கிறது.
மனைவி வேறிடத்தில் இருக்கிறார்
ஆபரணம் எங்கே இருக்கிறது?
ஆபரணம் ஓரிடத்தில் இருக்கிறது.
என்னுடைய மனைவி அங்கே இருக்கிறார்.
அவருடைய மனைவி இங்கே இல்லை.
வாயு எல்லாவிடத்திலும் இருக்கிறது.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- சிரிக்கும் தருணங்கள் ….!
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- மலைகள்
- சாத்தான் படலம் !
- அகோரி
- மானுட பிம்பங்கள்
- தனித்தில்லை
- நீலத்தில் மனம் தோயும்போது…
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- மூன்றாமவன்
- முள்பாதை 42
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- சிறகும், உறவும்!
- நட்பு
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- நானை கொலை செய்த மரணம்
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)