18 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18

ரேவதி மணியன்


இந்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை, …) ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் (कदा ?) கதா ? (kadā ?) என்ற வினாச் சொல் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

கீழே அட்டவணையில் உள்ளவற்றை உரத்துச் சொல்லி மனப்பாடம் செய்துகொள்ளவும். இவையனைத்தும் பேச்சு வழக்கில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுபவை.

अद्य (adya) – இன்று

श्वः (śvaḥ) – நாளை

परश्वः (paraśvaḥ) – நாளை மறுநாள்

प्रपरश्वः (praparaśvaḥ) – நாளை மறுநாளுக்கு மறுநாள்

ह्यः (hyaḥ) _ நேற்று

परह्यः (parahyaḥ) – நேற்று முன்தினம்

प्रपरह्यः (praparahyaḥ) – நேற்று முன்தினத்திற்கு முன்தினம்

அடுத்து கிழமைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? நம்மில் பலருக்கு இந்தப் பெயர்கள் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பேச்சு வழக்கில் இருப்பவைதான்.

शनिवासरः (śanivāsaraḥ) – சனிக்கிழமை

भानुवासरः (bhānuvāsaraḥ) – ஞாயிற்றுக்கிழமை

सोमवासरः (somavāsaraḥ) – திங்கட்கிழமை

मङ्गलवासरः (maṅgalavāsaraḥ) – செவ்வாய்க்கிழமை

बुधवासरः (budhavāsaraḥ) – புதன்கிழமை

गुरुवासरः (guruvāsaraḥ) – வியாழக்கிழமை

शुक्रवासरः (śukravāsaraḥ) – வெள்ளிக்கிழமை

மேலேயுள்ள கிழமைகளை உரத்துச்சொல்லி மனனம் செய்துகொள்ளவும். இப்போது இவற்றுடன் कदा ? (kadā ?) கதா ? என்ற வினாச் சொல்லைத் தொடுத்துக் கேள்விகள் அமைப்போமா?

अद्य सोमवासरः ! मङ्गलवासरः कदा ? (adya somavāsaraḥ ! maṅgalavāsaraḥ kadā ?)

இன்று திங்கட்கிழமை. செவ்வாய்க்கிழமை எப்போது?

मङ्गलवासरः श्वः ! (maṅgalavāsaraḥ śvaḥ )

செவ்வாய்க்கிழமை நாளை.

अद्य भानुवासरः! बुधवासरः कदा ? (adya bhānuvāsaraḥ ! budhavāsaraḥ kadā ? )

இன்று ஞாயிற்றுக்கிழமை. புதன்கிழமை எப்போது?

बुधवासरः प्रपरश्वः ! (budhavāsaraḥ praparaśvaḥ)

புதன்கிழமை நாளை மறுநாளுக்கு மறுநாள்.

अद्य गुरुवासरः ! मङ्गलवासरः कदा? (adya guruvāsaraḥ ! maṅgalavāsaraḥ kadā ?)

இன்று வியாழக்கிழமை. செவ்வாய்க்கிழமை எப்போது?

मङ्गलवासरः परह्यः! (maṅgalavāsaraḥ parahyaḥ)

செவ்வாய்க்கிழமை நேற்று முன்தினம்.

अद्य षोडशदिनाङ्कः ! पञ्चदशदिनाङ्कः कदा? (adya ṣoḍaśadināṅkaḥ pañcadaśadināṅkaḥ kadā ?)

இன்று பதினாறாம் தேதி. பதினைந்தாம் தேதி எப்போது?

पञ्चदशदिनाङ्कः ह्यः ! ( pañcadaśadināṅkaḥ hyaḥ !)

பதினைந்தாம் தேதி நேற்று.

अद्य २४ तमदिनाङ्कः ! २६ तमदिनाङ्कः कदा ? (adya 24 tamadināṅkaḥ ! 26 tamadināṅkaḥ kadā?)

இன்று 24 ஆம் தேதி. 26ஆம் தேதி எப்போது?

२६ तमदिनाङ्कः परश्वः ! (26 tamadināṅkaḥ paraśvaḥ !)

26ஆம் தேதி நாளை மறுநாள்.

“தம” (th) என்ற சொல்லை எண் 20 க்கும் அதற்கு மேல் உள்ள எண்களுக்கும்தான் சேர்க்கவேண்டும். दिनाङ्कः ( dināṅkaḥ ) என்றால் “தேதி”.

அடைமொழியில் எழுத்துப்பெயர்த்தலில் (transliteration) கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படிப்படிக்க வேண்டும் என்பதைக் கீழேயுள்ள அட்டவணையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். சமஸ்கிருதத்தில் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு மிகவும் முக்கியம். தவறாக உச்சரித்தால் வார்த்தையின் பொருளே மாறிவிடும். உதாரணமாக करः (karaḥ) “கரஹ” என்றால் “உள்ளங்கை” என்று பொருள். खरः (kharaḥ) “க்கரஹ” என்று “க்”கை அழுத்திச் சொன்னால் “கழுதை” என்று பொருள். எனவே இனிவரும் பாடங்களில் எழுத்துப்பெயர்த்தலிலும் (transliteration) கொடுக்க எண்ணியுள்ளேன். எனவே கீழேயுள்ள அட்டவணையை print செய்து வைத்துக்கொள்ளவும்.

KeytoTransliteration

KeytoTransliteration andPronunciationofSanskritLetters

अ a (but) ङ ṅ (sing) न n (numb) आ ā (mom) च c (chunk) प p (spin) इ i (it) छ ch (catchhim) फ ph (loophole) ई ī (beet) ज j (john) ब b (bin) उ u (put) झ jh (hedgehog) भ bh (abhor) ऊ ū (pool) ञ ñ (bunch) म m (much) ऋ ṛ (rhythm) ट ṭ (start) य y (young) ए e (play) ठ ṭh (anthill) र r (drama) ऐ ai (high) ड ḍ (dart) ल l (luck) ओ o (toe) ढ ḍh (godhead) व v (vile) औ au (loud) ण ṇ (under) श ś (shove) क k (skate) त t (path) ष ṣ (bushel) ख kh (bunkhouse) थ th (thunder) स s (so) ग g (gate) द d (that) ह h (hum) घ gh (loghouse) ध dh (breathe)
Series Navigation<< விடாது நெருப்பு<< முதல்மழை<< நறுமணமான பாடலொன்று<< அகிலத் தூசியும், வாயு முகிலும் உருவாக்கும் கேலக்ஸி ஒளிமந்தைகள் (கட்டுரை: 4)<< இவர்களது எழுத்துமுறை – 17 தி.ஜானகிராமன்<< முகமூடி!<< வல்லரசு!<< நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1<< தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< ரகசியங்கள்<< சரியாய் உலகில் வாழ்ந்துவிடு<< சாட்சிகளேதுமற்ற மழை<< ஓயாத கடலொன்று..<< கொசு<< முடிச்சு -குறுநாவல்<< ‘கண்கள் இரண்டும்…..’<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6<< வாரிசு<< வன்முறை<< பரிமளவல்லி 22. தேறுதல்<< முள்பாதை 57<< நினைவுகளின் சுவட்டில் – (57)<< அறமே சிவம்! சிவன் சொத்து…? அலைக்கற்றை மற்றும் தொலை தொடர்பு துறை ஊழல் தொடர்பாக – ஒரு முழுகவிதையே இடக்கரடக்கலாக!<< வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!<< தன்னம்பிக்கை<< ச‌ருகுக‌ள்<< எதிர்ப்படும் கையகல நீர்மை…<< ’ரிஷி’யின் கவிதைகள்<< சிங்கப்பூர் எழுத்தாளர் தக்கலை எச்.முகமது சலீமின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஹெச்.ஜி.ரசூல் கவிதை<< இருட்டும் தேடலும்

This entry is part 1 of 34 in the series 20101128_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்