25 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25

ரேவதி மணியன்


இந்த வாரம் வினாச் சொல்லின் ( Interrogative word) இறுதிச் சொல்லான किमर्थम् ? (kimartham ) “Why?” or “What for ?” ( “ஏன் ?” , “எதற்காக ?”)என்பதைப்பற்றி விரிவாகக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலும் எதற்காக அல்லது எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதை விரிவாக சொல்லும்போது किमर्थम् ? என்ற வினாவின் விடை கிடைக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டை உரத்துப் படிக்கவும்.

उदा 1 – सः किमर्थं विद्यालयं गच्छति ? (saḥ kimarthaṁ vidyālayaṁ gacchati ?)

सः पठनार्थं विद्यालयं गच्छति ! (saḥ paṭhanārthaṁ vidyālayaṁ gacchati !)

உதா 1 – அவன் எதற்காக பள்ளி செல்கிறான் ?

அவன் படிப்பதற்காக பள்ளி செல்கிறான் .

उदा 2 – सा किमर्थं योगासनं करोति ? (sā kimarthaṁ yogāsanaṁ karoti ?)
सा आरोग्यार्थं योगासनं करोति ! (sā ārogyārthaṁ yogāsanaṁ karoti !)

உதா 2 – அவள் எதற்காக யோகாசனம் செய்கிறாள் ?
அவள் ஆரோகியத்திற்காக யோகாசனம் செய்கிறாள்.

उदा 3 – वेङ्कटेशः प्रवासार्थं विदेशं गच्छति ! (veṅkaṭeśaḥ pravāsārthaṁ videśaṁ gacchati !)

वेङ्कटेशः किमर्थं विदेशं गच्छति ? (veṅkaṭeśaḥ kimarthaṁ videśaṁ gacchati ?)

உதா 3 – வேங்கடேஷ் சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு செல்கிறார்
வேங்கடேஷ் எதற்காக வெளிநாடு செல்கிறார் ?

उदा 4 – सः ध्यानार्थं तत्र उपविष्टवान ! (saḥ dhyānārthaṁ tatra upaviṣṭavān |)
सः किमर्थं तत्र उपविष्टवान ? (saḥ kimarthaṁ tatra upaviṣṭavān ?)

உதா 4 – அவன் தியானத்திற்காக அங்கு உட்கார்ந்தான்.
அவன் எதற்காக அங்கு உட்கார்ந்தான் ?

மேலே உள்ள முதல் இரண்டு உதாரணங்களில் किमर्थम् ? என்ற வினா எழுப்பப்பட்டு அதற்கான விடை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு உதாரணங்களில் பதில் கொடுக்கப்பட்டு பின்னர் किमर्थम् ? என்ற வினா தொடுத்துள்ளோம்.

अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி

கீழேயுள்ள உதாரணத்தைப் பார்த்து மற்ற வினாக்களுக்கு விடை அமைக்கவும்.

उदा – सः किमर्थं ग्रन्थालयं गच्छति ? (पठनम्) (saḥ kimarthaṁ granthālayaṁ gacchati ? (paṭhanam) )
सः पठनार्थं ग्रन्थालयं गच्छति ! (saḥ paṭhanārthaṁ granthālayaṁ gacchati !)

உதா – அவன் எதற்காக நூலகம் செல்கிறான் ? (படிப்பு)
அவன் படிப்பதற்காக நூலகம் செல்கிறான்.

1. रोगी किमर्थम् औषधं पिबति ? (आरोग्यम्) (rogī kimartham auṣadhaṁ pibati ? (ārogyam)
———————————————————- !

1. நோயாளி எதற்காக மருந்து குடிக்கிறார் ? (உடல்நலம்)
————————————————— !

2. एषः किमर्थम् आपणं गच्छति ? ( क्रयणम् ) (eṣaḥ kimartham āpaṇam gacchāti ? ( krayaṇam) )

——————————————————– !
2. இவன் எதற்காக கடைக்குச் செல்கிறான் ?(வாங்க)
———————————————- !

3. सः किमर्थं पुस्तकं क्रीणाति ? (अध्ययनम्) (saḥ kimarthaṁ pustakaṁ krīṇāti ? (adhyayanam) )

——————————————————– !

3. அவன் எதற்காக புத்தகம் வாங்குகிறான் ? (படிக்க)
————————————————- !

4. सा किमर्थं शीघ्रं गच्छति ? ( सखीदर्शनम्) (sā kimarthaṁ śīghraṁ gacchati ? (sakhīdarśanam) )

————————————————– !

4. அவள் எதற்காக வேகமாகச் செல்கிறாள்? (தோழியைப்பார்க்க)

—————————————————– !

5. चित्रकारः किमर्थं नदीतीरं गतवान् ? (चित्रलेखनम् ) (citrakāraḥ kimarthaṁ nadītīraṁ gatavān ?
( citralekhanam) )
———————————————- !

5. ஓவியர் எதற்காக கடற்கரைக்குச் சென்றார் ? ( ஓவியம்வரைய)
————————————————— !

விடைகள்

1. आरोग्यार्थम्

2. क्रयणार्थम्

3. अध्ययनार्थम्

4. सखीदर्शनार्थम्

5. चित्रलेकनार्थम्

இதுவரை ஏழுவிதமான வினாச் சொற்களையும் (सप्त ककाराः) விரிவாகக் கற்றுக்கொண்டுள்ளோம். அவைகளை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வோமா ? அனைத்து வினாச்சொற்களும் “க” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் இவை सप्त ककाराः என்று அழைக்கப்படுகின்றது.

1. कः / का / किम ? யார் ? எது?

2. कुत्र ? எங்கு ?

3. कति ? எத்தனை ?

4. कदा ? எப்போது ?

5. कुतः ? எங்கிருந்து ?

6. कथम् ? எப்படி ?

7. किमर्थम् ? எதற்காக ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களை कः / का / किम , कुत्र , कति , कदा , कुतः , कथम् , किमर्थम् என்ற ஏழுவிதமான வினாச் சொற்களில் பொறுத்தமானதைக் கொண்டு நிரப்பவும்.

1. दशरथस्य —————————– पुत्रा? दशरथस्य चत्वारः पुत्राः ! (daśarathasya ——– putrāḥ ? daśarathasya catvāraḥ putrāḥ ! )
1. தசரதருக்கு ———————- புதல்வர்கள் ? தசரதருக்கு நான்கு புதல்வர்கள்.

2. भवन्तः —————————- तत्र गतवन्तः ? वयं पठनार्थं तत्र गतवन्तः ! (bhavantaḥ ——— tatra gatavantaḥ ? vayaṁ paṭhanārthaṁ tatra gatavantaḥ !)
2. நீங்கள் —————————– அங்கு சென்றீர்கள் ? நாங்கள் படிப்பதற்காக அங்கு சென்றோம்.

3. भवत्याः विरामः ———————- ? मम विरामः सोमवासरः ! (bhavatyāḥ virāmaḥ ———- ? mama virāmaḥ somavāsaraḥ !)

3. உன்னுடைய விடுமுறை ——————— ? என்னுடைய விடுமுறை திங்கட்கிழமை.

4. एषा शाटिका ———————- अस्ति ? शाटिका बहु सम्यक् अस्ति ! (eṣā śāṭikā ——— asti ? śāṭikā bahu samyak asti ! )
4. இந்தப் புடவை ——————— இருக்கிறது ? புடவை மிக நன்றாக இருக்கிறது.

5. भवान् इदानीम् ————————– करोति ? अहं पाठं पठामि ! (bhavān idānīm ——– karoti ? ahaṁ pāṭhaṁ paṭhāmi |)
5. நீங்கள் இப்போது ——————— செய்கிறீர் ? நான் பாடம் படிக்கிறேன்.

6. बालकः ——————– अस्ति ? बालकः बहिः अस्ति ! (bālakaḥ ——– asti ? bālakaḥ bahiḥ asti ! )
6. சிறுவன் —————— இருக்கிறது ? சிறுவன் வெளியே இருக்கிறான்.

7. भवतः मातुलः ————————- आगतवान् ? मम मातुलः रामेश्वरतः आगतवान् ! ( bhavataḥ mātulaḥ —– āgatavān ? mama mātulaḥ rāmeśvarataḥ āgatavān ! )
7. உங்களுடைய மாமா —————– வந்தார் ? என்னுடைய மாமா ராமேஸ்வரத்திலிருந்து வந்தார் .

8. भवतः गृहे ————————- जनाः सन्ति ? मम गृहे दश जनाः सन्ति ! (bhavataḥ gṛhe ——— janāḥ santi ? mama gṛhe daśa janāḥ santi ! )
8. உங்களுடைய வீட்டில் ————————- ஜனங்கள் இருக்கிறார்கள் ? என்னுடைய வீட்டில் பத்து ஜனங்கள் இருக்கிறார்கள்.

9. ———– विद्यालयं गच्छति ? कमला विद्यालयं गच्छति ! (———– vidyālayaṁ gacchati ? kamalā vidyālayaṁ gacchati ! )
9. ———————- பள்ளி செல்கிறாள் ? கமலா பள்ளி செல்கிறாள் .

10. ——————— फलं खादति ? गणेशः फलं खादति ! (———– phalaṁ khādati ? gaṇeśaḥ phalaṁ khādati ! )
10. ——————— பழம் சாப்பிடுகிறான் ? கணேஷ் பழம் சாப்பிடுகிறான்.

விடைகளை கீழே சரிபார்த்துக் கொள்ளவும்.

1. कति

2. किमर्थम्

3. कदा

4. कथम्

5. किम्

6. कुत्र

7. कुतः

8. कति

9. का

10. कः

அடுத்த வாரம் இறந்த கால நிகழ்ச்சிகளை ஆண்பால் மற்றும் பெண்பாலில் ஒருமை ,பன்மையில் எப்படிச் சொல்வது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம். அந்தந்த வாரப் பாடங்களை உடனுக்குடன் படித்துப் பயன் பெறவும்.

Series Navigation<< பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)<< புத்தனின் இரண்டாம்வருகை<< ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு<< நீங்கதான் சாவி..:-<< தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா<< அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு<< ” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்<< தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்<< ராஜநீதி.<< உடைகிறக் கோப்பைக்குள்<< நேற்றைய நள்ளிரவு என்பது..<< தொலைந்த நான் …<< கண்ணாமூச்சி<< நட்ட நடு இரவு!<< இருந்து<< பயணி கவனிக்கிறாள்.<< வாழ்வு<< வாழ்க்கைச் சக்கரம்<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14<< கணினி மேகம் Cloud Computing – Part 3<< ஆனந்தக் கூண்டு<< கேமராவிலிருந்து….<< அவள்..அவன்..அது..<< பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)<< வேண்டுதல்<< விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:<< இந்தியாவின் 50 அடி பிளவு<< சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்<< ஒரு குழந்தை மழை.<< அந்த முத்துக்களை<< வலியொன்று…!<< நிலவும் அந்த நினைவும் மட்டும்..<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)<< ராஜா கவிதைகள்<< ஒரு சோகம்…..!<< பறவைகளைப் போல வாழ்வோம்

This entry is part 1 of 39 in the series 20110123_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்