கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உலகு முழுதும் சுற்றித் தேடி
ஓடாதே
ஒரு குகையைக் கண்டு
ஒளிந்து கொள்ள !
ஒளிந்திருக்கும் கடும் விலங்கு
ஒவ்வோர் குகையிலும் !
எலிப் பொந்தில் நீ வசித்தால்
ஒரு பூனைக் கால் நகம்
உனைப் பிறாண்டி விடலாம் !
உண்மை யான ஓய்வு
உனக்கு வருவது நீ இறையுடன்
தனியாய் உள்ள போது !

++++++++++++

உனக்கொரு முகவரி இங்கே
இருப்பினும்
உதித்து நீ வசித்த இடம்
ஒருவருக் கும் தெரியாது !
இரு தோற்ற மாய்த் தெரியுது
அதனால் நீ
எதை நோக்கினும் !
ஒரு சமயம்
உனக்குத் தெரியுது
ஒருவனை நீ நோக்கும் போது
சீறிப் பாய்ந்திடும் ஓர்
அரவம் என்று !
வேறு ஒருவன்
அருமைக் காதலன் என்று
கருதுவான் அவனை !
இருவர் நினைப்பதும் சரியே !

+++++++++++

ஒவ்வொரு மனிதனும்
நிறுத்துப் பார்ப்பதில் பாதி ! பாதி !
கருப்பு வெளுப்பு போல் !
ஆதாமைக் கண்டு
அழகீனன் என்பார் சோதரர் !
ஒப்பிலா அழகன் என்று
அப்பன் அழுத்திச் சொல்வான் !
கண்களை நம்பாதே
தூரத்தை நோக்கும் போது !
காரணம் உனது
கணிப்பு மிகையோ, குறைவோ ?

+++++++++++

இரு நோக்கு உள்ளது விழிக்கு !
இங்கும் அங்கும்
தாவி அலையும் அதற்கு !
பாய்ந்திட முயல்வாய் ஈர்த்திடும்
பயங்கர வலைக்குள் !
வற்றிடும் சிறிது சிறிதாய் !
சதுரங்கக் கட்டத்தில் ராஜாவை
இப்படி அடைப்பதா ?
அப்படி அடைப்பதா ?
நெஞ்சித் திறந்து வைத்திடு !
தூண்டில் விற்கப் போக
வேண்டாம் இனி !
சுதந்திர மாய் நீந்தும்
சுறாமீன் நீ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9 , 2011)

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா