கூடடையும் பறவை

வருணன்



ஒவ்வொரு அந்தியிலும்
பறந்து களைத்த பறவை
கூடடைவதைப் போல
தனிமை வந்தமர்கிறது
என் கிளைகளில்
மொழிகள் மறுதலித்த
அடர் மௌன வனத்தின்
ஒற்றை மரமாய்
கிளைகள் பரப்பி நான்.
சில்வண்டுகளின் ரீங்காரமோ
காற்றின் சிலும்பலோ
இலைகளின் நடனமோ
ஏதுமற்ற பேரமைதியில் வனம்.

-வருணன்

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

வருணன்

வருணன்