சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4

ராமச்சந்திர கோபால்


ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது.
இனி உயிர்மெய் எழுத்துக்கள்.

தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும்.

க் + அ = க
க் + ஆ = கா என்று ஆகிறது.

இதே போல சமஸ்கிருதத்திலும் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாகும்

இதுவரை க ச ட ய போன்ற எழுத்துக்களை அகரம் சேர்த்து படித்தோம்

தமிழில் மேலே புள்ளி போட்டால் அகரம் அல்லாத மெய்யெழுத்தாகும். அதாவது க் என்று ஆகும்.

இதே போல சமஸ்கிருத எழுத்துக்களை எழுத கீழே கோடு போட வேண்டும்

உதாரணமாக क என்பது க ஆகும். க் எழுத क्என்றாகும்

சமஸ்கிருத க-வின் கீழே இருக்கும் கோட்டை கவனியுங்கள்.

இப்போது எவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதற்கு

क्+अ= क – க
क्+आ=का – கா
क्+इ=कि கி
क्+ई=की கீ
क्+उ=कु கு
क्+ऊ=कू கூ
क्+ए=के கெ
क्+ऐ=कै கை
क्+ओ=को கொ
क्+औ=कौ கௌ

கவனியுங்கள். கே கோ ஆகிய எழுத்துக்களை நான் எழுதவில்லை. இந்த எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் பயன்படுத்துவதில்லை. இரண்டும் கெ கே இரண்டும் ஒரே மாதிரிதான் உச்சரிக்கப்படுகின்றன.

இதே போல மீத எழுத்துக்களையும் வாய்விட்டு சொல்லி எழுதிப்பழகுங்கள்.

Series Navigation

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்