தேனு
விடியல் பயணத்தின் விளிம்பொன்றில்
என்னை விலக்கி
அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்..
.
அவன் யார்?
என்னைக் காணும் வேளைகளில்
அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான
தகிக்கும் அர்த்தங்கள் யாது?
எனக்கும் அவனுக்குமான
இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள்
உரைப்பது உண்மையில் என்ன?
அவன் என்னைத் தீண்டுகையில்
பிரதிகள் இடம்மாற்றப்படுவதை
இதழ்களும் செவிகளும்
உணர மறுக்கும் தருணங்கள் ஏன்?
.
இவ்வாறான எனக்காய் உதிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும்
அவனிடம் இருப்பில் இருப்பது
வெளிப்படையான மௌனம் மட்டுமே..
அவன் மௌனத்தின் உச்சரிப்பினில்
சகலமும் லயித்திருக்க…
அவனுக்கான சிறகுகள் எனக்கும்
எனக்கான எண்ணங்கள் அவனுக்கும்
இடம் மாறியிருந்ததன…
தற்சமயம் மௌன சிறகுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் நான்,
எனக்கு
கருமையாகத் தெரிகிறதில்லை
சிறகுகளின் நிறம்…
.
– தேனு [thenuthen@gmail.com]
- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…!
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- அகம்!
- அரசியல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கை விடப்பட்ட திசைகள்..
- இவைகள் !
- நம்பிக்கை
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- யார்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- ஒரு பூ ஒரு வரம்
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- அரசியல் குருபெயர்ச்சி
- நட்பு
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- ரீங்கார வரவேற்புகள்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- தூசி தட்டுதல்
- நகர் புகுதல்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- சாலைக் குதிரைகள்
- முகபாவம்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1
- 37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1