மீன்பிடி கொக்குகள்..

இளங்கோ



வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்

நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது

அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்

நி
ற்
கி

து..

நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே

மீன் பிடிக்கவா..?

தூ..!

கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..

*******
— இளங்கோ

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 >>

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

இளங்கோ

இளங்கோ