சாலைக் குதிரைகள்

சூர்யா நீலகண்டன்


சாலையில் சிங்கமாய் சீறி
இயந்திரக் குதிரைகளில்
பறந்தவர்களை
காவல் துறை
கேமிராக் கண்களில்
பார்த்து கைகளில்
விலங்கை மாட்டியது.

சிறையின் கம்பிகளுக்குள்
இருந்து கண்ணயர்ந்தவர்களின்
கனவில் ஒரு தேவதை வந்து
சொன்னாள்..

போட்டிகளுக்கென்றே
களங்கள் இருக்கின்றன..
திறன்களையெல்லாம்
அங்கே கொட்டினால்
கோப்பைகளெல்லாம்
வீட்டில் குவியுமே என்று.

Series Navigation37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 >>

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

சூர்யா நீலகண்டன்

சூர்யா நீலகண்டன்