கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நள்ளிரவுப் பொழுதில்
துள்ளி அலறினேன் :
“நான் கொண்டுள்ள காதலில்
வசித்து வருவது யார் ?”
நீ சொல்வாய் :
“நான் அறிவேன். அதனில்
நான் மட்டு மில்லை.
மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன்
பற்றி யுள்ளன என்னை ?”
நான் உரைத்தேன் :
உனது பிரதி பலிப்புகள்
அவை எல்லாம் !
ஒருவரை ஒருவர் ஒத்திருக்கும்
துருக்கிய எழிலவர் அவர்.”

++++++++++++

நீ கேட்டாய் :
“காதலில் அடுத்துள்ள
அந்தக் குடிவாசி யாரெனச் சொல் ?”
“காயப் பட்ட
எந்தன் ஆத்மா அது,
அந்தச் ஆத்மாவைச் சிறைப்பிடித்து
வந்துள்ளேன் உன்னிடம் !
ஆபத் தானது ஆத்மா !
அதற்கு விடுதலை கொடுக்காதே
எளிதாய் !” என்று
அளித்தேன் பதில் நான் !
கண் சிமிட்டிக்
கையில் ஒரு நூல் முனைக்
கயிற்றைக் கொடுத்தாய் !
இறுக்கிப் பிடி நாணை, ஆனால்
அறுந்து போகாமல் !

++++++++++++

உனைத் தொட நான்
முனைந் திட்ட போது
வெடுக்கெனத் தடுத்தாய்
எனது கையை !
வெஞ்சினம் கொள்வதும் ஏன் ?”
“நல்ல காரணம்
உள்ளது அதற்கு !
ஒதுக்க வில்லை உன்னை !
இங்கு வருவோரில்
‘நான் நான்’ என்று
கர்வம் கொண்டவன்
கன்னத்தில் அறைய வேண்டும்.”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

Series Navigation37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 >>

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா