கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++
இசை தனித்துவ மொழி
+++++++++++

இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
அது உயிரூட்டும் உணர்வு !
இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
அதுவே அதன் நெஞ்சு !
படைக்கும் போது
கடவுள்
இசை யெனும்
தனித்துவ மொழியை
மனிதனுக்கு அளித்துளான் !
அனைத் துக்கும் வேறு பட்ட
இனிய மொழி அது !
ஆதி மனிதன்
அதன் உன்னதம் பாடினான்
அடர்ந்த கான கத்தில் !
இசை மகள் அரசனின்
இதயம் கவர்ந்து
ஆசனத்தி லிருந்து
இறங்கி வரச் செய்தாள் !

+++++++++++

ஊழ் விதிப் புயலின்
அசுரத் தாக்கலில்
பாழ் பட்டுப் போன
மெல்லிய பூக்களே
நமது ஆத்மா வெல்லாம் !
அதிகாலைத் தென்றலில் கூட
ஆடி நடுங்கிடும்
ஆத்மாக்கள் !
வானி லிருந்து வீழும்
பனித் துளிகளால்
கூனிப் போகும் நமது ஆத்மா !

+++++++++++

பறவையின் இசை ஒலிகள்
மனிதரின்
உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

Series Navigation<< குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2) >>

This entry is part 50 of 43 in the series 20110529_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா