தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்


குறுந்தகவல் தூது..
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..
கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..

—————–
இறக்கைப்பயணத்தினூடே..
********************************************

அல்லாவுதீன் பூதமாய்
அடு்த்து அடுத்து
என்கிறது..
என்ன கொடுத்தாலும்..

இரை எடுக்கிறேன் அலகில்..
கூட்டுக் குருவிகளுக்காய்..
எனக்கான எதிர்கால
சேமிப்பாய்..

உருவம் மாறி
உலவிச் செல்கிறேன்
காற்றாயும்.,
நீராயும்.. நெருப்பாயும்..

கண்டுபிடித்த
ஆகாயமாயும் மெய்யாயும்
கலவிக் கிடக்கிறது
உள்ளெடுத்த என்னோடு..

பயணம் செய்கிறேன்
அதனோடு கம்பளத்தில்
கூட கோபுரங்களும்
மாடமாளிகைகளும் அருகில்..

உப்பரிகைகள் மட்டுமல்ல
உப்பளங்களும்
உணர்ந்தே பயணிக்கிறேன்..
உராயும் தென்றலோடு.

Series Navigation26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26 >>

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்