கடிகை வழி பாதை

ராஜா



மறுவிநாடி தொட்டதும் மரணம்
என்றறிந்தவுடன்
மென்னுடல் நடுங்குகிறது
இருக்கும் நொடியில் இருந்து
இறக்கும் நொடி நோக்கி
நகர்கிறது
பாதி வழி கடந்ததும்
இறந்த நொடியிடமே
திரும்பிவிடுகிறது.
____________________________

சொல்வன்மை

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடியது
பிணிகளின் பட்டியலல்ல
கைவிடுதலின் புத்திகூறல்ல
திசைதிருப்பலின் வழிமுறைகளல்ல
மாற்றுகளின் அறிமுகமல்ல
நன்றுகளின் உன்னதம் பற்றியதல்ல
வந்தவை போனவையின்
கணக்கு வழக்கல்ல

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடாதது
யாரோ புகைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்
என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.
____________________________________________________________

Series Navigation29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 >>

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ராஜா

ராஜா