ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************
(சென்ற வாரத் தொடர்ச்சி)
+++++++++++
சினமுற்றுச் சீறுவான் காலி•ப் !
முணுமுணுக் கும் பெண் குரல்
வைக்கோல்
பாயின் கீழ் எழுமோர்
பாம்பென நினைப்பான் வேந்தன் !
ஆண்குறி தயங்கி
வணங்கு வதை நகையாடி
வக்கணை அடிப்பாள்
அணங்கு !
பொக்கெனச் சிரிப்பாள்
பொங்கும் அலைகள் போல் !
முன்பொரு நாள் காலி•ப்
சிங்கத்தைக் கொல்லும் போது
அங்கம் நிமிர்ந்தை
சிந்தித்துப் பார்த்தாள் !
சிரிப்பொலிகள் வெடித்துச்
சிதறும்
பெண்ணின் வாயில் !
++++++++++++++
செவ்விளங் கன்னியவள்
சிரிக்கச் சிரிக்க
சினம் மிகுந்திடும் வேந்தனுக்கு
மருந்து தின்னத் தின்ன
மதி சுழல்வது போல !
மங்கையின் நகைப்புக் கிடமாகும் !
ஒவ்வோர் உணர்ச்சிக்கும்
ஓர் ஊற்றுள்ளது
மூல வேராய் !
திறவு கோலும் உள்ளது
மூடியைத் திறக்க !
கடுஞ்சின முற்றான் காலி•ப் !
கத்தியை உருவினான் :
“என்ன சிரிப்புனக்கு இதிலே ?
என்னிடம் சொல்
நினைப் பதை எல்லாம் !
ஒளிமறை வின்றிச் சொல் !
உணர்ச்சி வசப்பட வில்லை நான் !
எச்சரிக்கை இது :
பொய் சொன்னால்
போய்விடும் உன் தலை !
உண்மை கூறினால்
உனக்கு விடுதலை கிடைக்கும் !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28, 2011)
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- நானாச்சு என்கிற நாணா
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- வெந்நீர் ஒத்தடம்!
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- மனப்பிறழ்வு
- இயலும்
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- பொதுவான புள்ளியொன்றில்..
- நீளும் இகற்போர்…..
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- கடிகை வழி பாதை
- பேராசை
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- 29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)