தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்


1. உயிர்த்தெழும் கண்கள்..
*****************************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..
உணர்விருக்கும் போதே
உயிலெழுதலாம்.. கண்ணை
அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..

******************************************************************

2. சாயல்கள்..
**********************************

ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..

ஏதேதோ பிம்பங்களில்., விழைவுகளில்
இருவரும் மாயமானைத் துரத்தி..
திரும்பி ஒரு புள்ளிக்கோட்டில்
சந்தித்துக் கொள்வர். ,
இரண்டு பிள்ளை ரேகைகளின் ஊடே..

அவ்வப்போது இது நிகழ்ந்தாலும்
குளியலறையும்.,
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியும்.,
படுக்கும் அறையும் ஒன்றுதான்..

சுருக்கங்களும் நரைகளும்
இருவருக்கும் பொதுமையான போது
அவள் சாயலோ.,
அவள் அன்பின் சாயலோ படர்ந்து
அவர் அவளாயிருந்தார்..
அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
அவள் அவராயிருந்தாள்..

Series Navigation29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 >>

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்