கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எழுதும் இந்த எழுத்தாணியை
எடுக்காது செம்மறி ஆடு !
பிரிக்கும் இடைவெளிப்
பேதங்கள் இல்லை நமக்குள்ளே !
காதலின் புனித பீடம் இது !
கண்களைக் கசக்கி
காதலைக் காதலோடு நோக்கு
மீண்டும் !

++++++++++++

“வாசலில் யாரெனக் கேட்டாய்”
“உனது அன்புத்
தாசன்” என்றேன் நான் !
“எதற்கு வந்தாய் ?”
என்று நீ கேட்டாய்.
“வழிபட்டு உன் பாதத்தை
வணங்கிட வந்தேன்.”
“எத்தனை காலம் காத்தி ருப்பாய்
எனக்கு நீ” என்றாய் !
“மறு பிறவி நான்
எடுக்கும் வரை” என்று பதில்
விடுத்தேன் !

++++++++++++

வாசலில் பேசிக் களித்தோம்.
நேசம் உன்னத மெனப்
பெருமிதம் எனக்கு ! ஆயினும்
இழந்து நிற்பேன்
இவ்வுலகம் எனக் களித்த
இன்பக் கொடையை !
“இதற்கெலாம் சான்றுகள்
வேண்டும்” என்று
தூண்டுவாய் !
“ஏங்கி நான்
இப்படிக் கண்ணீர் பொழிவதை
எடை போடுவதா ?”

+++++++++++

“என்ன அடிப்படையில் வந்தாய் ?”
என்று விளித்தாய் !
“நீ அளித்த கற்பனை அதற்கு
நியாயம் சொன்னது.”
“உனது குறிக்கோள் என்ன ?”
என்றெனைக் கேட்டாய்.
“இருவருக்குள் ஏற்படும் நட்புறவு ”
என்று பதில் அளித்தேன் !
“எதை எதிர்பார்க் கிறாய்
என்னிடம் ?” என்றாய்
“காத லெனும் பாசத்தை” என்று
ஓதினேன்.

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

Series Navigation<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 >>

This entry is part 51 of 43 in the series 20110529_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா