பம்பரம்

ரவிஉதயன்


மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை
நடுநாக்கில் தொட்டெடுத்து
சொடுக்கிச் சுழற்ற
தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி.

சாட்டைக் கையிற்றில்
எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான்.

அட்சய ரேகையிலிருந்து
இடம் மாறி
சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது
சுழலும் பூமிப்பம்பரம்.

Series Navigation<< சொர்க்கவாசி;-வழங்கப்பட்டிருக்கின்றதா? >>

This entry is part 64 of 43 in the series 20110529_Issue

ரவிஉதயன்

ரவிஉதயன்